சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்று திடீரென புறப்பட்டு சென்றார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 25ம் தேதி மாலை சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக பரபரப்பான முடிவை எடுத்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 8:05 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து விஜயவாடா புறப்பட்டு சென்றார். பின்னர் விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கையம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.