சென்னை: பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளதை திசை திருப்ப பாஜக முயற்சித்து வருகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளதை திசை திருப்ப பாஜக முயற்சித்து வருகிறது. மீனவர்கள் படகுகளை கூட மீட்டு கொடுக்க முடியாதவர், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார். சிஏஜி அறிக்கை பல கோடி ஊழல் நடந்து இருக்கிறது என்று தெரிவித்தது என்று அமைச்சர் கூறினார்.