சென்னை: சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இருள் சூழந்த வேளையில் நம்பிக்கைத் தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. குஜராத் பாஜக அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததை உச்சநீதிமன்றம் இடித்துரைத்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.