சென்னை: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சூரியசக்தி மின் வேலிகள் அகற்றப்பட்டுள்ளது. மின் வேலிகள் அகற்றப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் சூரியசக்தி மின்வேலி அமைத்துள்ளதாகக் கூறி டி.முருகேசன் என்பவர் வழக்கு தொடந்துள்ளார்.