ஈரோடு: பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் புலி உயிரிழந்தது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுஜ்ஜில்குட்டை வனப்பகுதியில் கடந்த 25ம் தேதி 6 வயது ஆண் புலி மர்மமான முறையில் உயிரிழந்தது. மானை வேட்டையாடுவதற்காக வைத்த சுருக்கு கம்பியில் புலி சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பவானிசாகர் அணை வனப்பகுதிகளில் இந்த கும்பல் வழக்கமாக மான் வேட்டையாடி கொல்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.