Sunday, May 26, 2024
Home » பல்வேறு துறைகளின் சார்பில் 9,948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பல்வேறு துறைகளின் சார்பில் 9,948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Suresh

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 37,305 சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 3,00,583 மகளிர் பயன்பெறும் வகையில் 2,504 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்திடும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்குதல் தொடக்கமாக இன்று ஈரோடு மாவட்டத்தில், 2,337 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 20,518 உறுப்பினர்களுக்கு ரூ.100.34 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் 6 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் சாவிகள் வழங்குதல், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.129.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 புதிய திட்டப்பணிகள் திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் 32 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 9,948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (08.02.2024) ஈரோடு மாவட்டம், சோலார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 37,305 சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 3,00,583 மகளிர் பயன்பெறும் வகையில் 2,504 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்திடும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் 100 – மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்குதல் தொடக்கமாக இன்று ஈரோடு மாவட்டத்தில், 2,337 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 20,518 உறுப்பினர்களுக்கு ரூ.100.34 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் 6 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் சாவிகள் வழங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.129.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 புதிய திட்டப்பணிகள் திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் 32 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 9948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, ‘ஈரோடு வந்தாலே என் தாய் வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வை எனக்கு தருகிறது. பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டம், திராவிட இயக்கத்தின் தொட்டிலாகும். பெண்கள் பொருளாதார சுதந்திரம் மற்றும் தற்சார்பு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு இயக்கம் துவங்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் செயல்படுவது அவர்களின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த, 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12,25,083 சுய உதவிக் குழுக்களுக்கு 69,554 கோடி ரூபாய் (அறுபத்து ஒன்பதாயிரத்து ஐநூற்று ஐம்பத்து நான்கு கோடி ரூபாய்) வங்கிக் கடன் இணைப்பாக வழங்கி சாதனை புரிந்துள்ளோம் என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். இன்று தமிழ்நாடு முழுவதும் வழங்கவுள்ள 2,504 கோடி ரூபாயும் சேர்த்து 72,058 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கி நமது அரசு மிகப்பெரும் சாதனைப் படைத்துள்ளது.

2023-2024-ம் நிதியாண்டிற்கு வங்கி கடன் இணைப்பு வழங்குவதற்கு 30,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 25,000 கோடி ரூபாய் வழங்கி நமது அரசு சாதனை படைத்துள்ளது. மீதமுள்ள இலக்கையும் அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு சுய உதவிக்குழு மகளிரான நீங்களே காரணம்.

நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் முதலில் கையெழுத்திட்ட திட்டம் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகை என்ற உண்ணதமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு பெண் ஒரு மாதத்திற்கு ரூ.900/- வரை சேமிக்க முடிகிறது. அதேபோல் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ’கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” இன்று குடும்பத் தலைவிகளான பெண்களுக்கிடையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரான நீங்கள் அனைவரும் அரசின் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்திட ஏதுவாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வணிக வளாகங்கள் அமைக்க ஆணையிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அந்த வணிக வளாகங்களுக்கு ’பூமாலை வணிக வளாகம்’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். நாளடைவில் பராமரிப்பின்றி பயனற்று போன அந்த வளாகங்களைப் புதுப்பித்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் நமது திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் தான்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ”புதுமைப் பெண் திட்டம்” இன்று பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை எப்போதும் விற்பனை செய்திட ஏதுவாக சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “மதி அனுபவ அங்காடி” என்னால் திறந்து வைக்கப்பட்டு, இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை இணைய தளத்தில் விற்பனை செய்திடும் வகையில் “மதி சந்தை விற்பனை இணைய தளம்’’, சிறுதானியங்களை விற்பனை செய்திட ஏதுவாக “மதி சிறுதானிய உணவகம்” போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

எனக்கு பரிசாக வரும் பொருட்கள் அனைத்தும், சுய உதவிக்குழு பொருட்களாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். இதனைப் பற்றி சட்டமன்றத்தில் கூட நான் பேசியுள்ளேன். முதலமைச்சரின் வீடு மற்றும் என் வீடு முழுவதும் சுய உதவிக்குழு பொருட்களே நிறைந்துள்ளன. அவர்களின் பொருட்களையே நான் பயன்படுத்தி வருகின்றேன். சுய உதவிக்குழு மகளிருக்கான உங்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன் தொகையை நமது அரசு கடன் தொகையாக பார்க்காமால் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கை தொகையாகத் தான் பார்கிறது. அதனை நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 37,305 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 300563 மகளிருக்கு 2504 கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்திடும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலான 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களையும் மற்றும் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வாக இன்றைய தினம் இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 2,337 குழுக்களைச் சேர்ந்த 20,518 மகளிர் பயன்பெறும் வகையில், சுய உதவிக் குழுக்களுக்கு 100.34 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளும் மற்றும் 6 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இன்றைய நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை -உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.129.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 புதிய திட்டப்பணிகளை இன்று திறந்து வைத்துள்ளேன்.

அதேபோன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் 32 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். மேலும் பல்வேறு துறைகளின் 9948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளேன்.

இந்நிகழ்வைத் தொடந்து, அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில், அரசு முதன்மைச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முனைவர் ப.செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் இஆப., மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இகாப., மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi