கோக்ரஜார்: படுக்கை முழுக்க பணத்தை கொட்டி அரசியல் கட்சி தலைவர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி அசாம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் ஆளும் பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) உறுப்பினர் பெஞ்சமின் பசுமாத்ரே. அம்மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பெஞ்சமின் பசுமாத்ரே இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, படுக்கை முழுவதும் ரூ.500 நோட்டுகளை கொட்டி அதன் மீது படுத்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரம் அசாம் அரசியலை ரணகளப்படுத்தி உள்ளது. ‘‘எதிர்க்கட்சிகள் என்றால் அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு விடும் ஒன்றிய பாஜ அரசு, தேர்தல் சமயத்தில் பணத்தில் படுத்து தூங்கும் கூட்டணி கட்சி தலைவரை என்ன செய்யப் போகிறது?’’ என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இது தொடர்பாக யுபிபிஎல் கட்சி அளித்துள்ள விளக்க அறிக்கையில், ‘கடந்த ஜனவரி 5ம் தேதி கிடைத்த இந்த புகைப்படம் தொடர்பாக பசுமாத்ரேவுக்கு எதிராக கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஜனவரி 10ம் தேதி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்’ என கூறப்பட்டுள்ளது.
மணி… மணி… மணி… மணி… படுக்கை முழுக்க பணத்தை குவித்து படுத்த கட்சி தலைவர்: அசாமில் பாஜ கூட்டணி அலறல்
previous post