ஊட்டி, மார்ச் 28: ஊட்டி இத்தலார் அருகே ராம்நகர் பகுதியில் தமிழ்நாடு ஆதி அருந்ததியர் பேரவை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆதி அருந்ததியர் பேரவை தலைவர் கைகாட்டி சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் முத்துராமலிங்கம், நல்லதம்பி, விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ராம் நகர் பகுதிக்கு செல்ல ஆற்றின் குறுக்கே தரை மட்ட சிறு நடைபாலம் உள்ளது.
இந்த நடை பாலத்தால் இப்பகுதிக்கு எந்த பயனும் இல்லை. இந்த நடை பாலத்தில் தவறி விழுந்து ஒரு நபர் இறந்துள்ளார்.எனவே, ராம்நகர் பகுதிக்கு அரசு, நல திட்டப்பணிகள், எதுவுமே நடைபெறவில்லை. காரணம் ஒப்பந்ததாரர்கள் யாருமே திட்ட பணிகள் செய்ய முன் வருவது இல்லை. எனவே, கனரக வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.