டெல்லி: கடற்கரை, கோயில்களுக்கு செல்லும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை லோகோவை வெளியிட்டு கார்கே பேசினார். காலையில் விழித்தவுடன் கடவுளை தரிசிப்பது போல் எங்கு பார்த்தாலும் மோடியின் படங்கள் உள்ளன. நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்காக பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடக்கிறது என்று கார்கே தெரிவித்தார்.