Thursday, May 16, 2024
Home » காதல் கணவனை தேடி நொய்டா வந்த வங்கதேச பெண்: உ.பி. போலீஸ் விசாரணை

காதல் கணவனை தேடி நொய்டா வந்த வங்கதேச பெண்: உ.பி. போலீஸ் விசாரணை

by Ranjith

நொய்டா: வங்கதேச பெண் சானியா அக்தர், தனது 1 வயது குழந்தையுடன் தனது காதல் கணவனை தேடி நொய்டா வந்துள்ளார். அவர் நொய்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம், ‘‘நொய்டாவை சேர்ந்த சவுரப்காந்த் திவாரி டாக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த போது, அவருக்கும் தனக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பின்னர் அவர் என்னை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். எனது கணவரை பிரிந்து வாழ எனக்கு விரும்பமில்லை. அவர் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நொய்டாவில் வசித்து வருகிறார். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். எனது மகன் மற்றும் என்னுடைய பாஸ்போர்ட், விசாவை போலீஸ் அதிகாரிகளிடம் காட்டி உள்ளேன்’ என்று தெரிவித்தார். இது குறித்து உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twelve − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi