Sunday, May 19, 2024
Home » நடுவானில் விமானப் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வங்கதேச வாலிபர் கைது: மும்பை விமானத்தில் அதிர்ச்சி

நடுவானில் விமானப் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வங்கதேச வாலிபர் கைது: மும்பை விமானத்தில் அதிர்ச்சி

by Francis

மும்பை: நடுவானில் விமானப் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வங்கதேச வாலிபரை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி வந்த சென்ற விஸ்தாரா விமானத்தில், வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது துலால் (30) என்பவர் பயணம் செய்தார். இவர் மும்பை வழியாக இணைப்பு விமானம் மூலம் வங்கதேசம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்த விமானம் மும்பையில் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, அதிகாலை 4.25 மணியளவில் விமானத்தில் பணியாற்றும் 22 வயது மதிக்கத்தக்க பணிப்பெண்ணை திடீரென முகமது துலால் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், முகமது துலாலின் பிடியில் இருந்து தப்பினார். இவ்விவகாரம் சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், விமான அதிகாரி தலையிட்டு முகமது துலாலிடம் விசாரணை நடத்தினார்.

அவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்தார். விமானம் அதிகாலை மும்பையில் தரையிறங்கியதும், முகமது துலாலை பிடித்து போலீசிடம் விமான பணியாளர்கள் ஒப்படைத்தனர். அதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். ெதாடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர் திரிபாதி, ‘மன ரீதியாக முகமது துலாலுக்கு சிக்கல் இருந்துள்ளது. அவருக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது’ என்றார். அதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முகமது துலாலை இன்று வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று போலீசார் விசாரணை முடிந்த பின்னர், அவரை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக வங்கதேச தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

 

You may also like

Leave a Comment

5 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi