கல்யானி: மேற்கு வங்க மாநிலம் நடியாவில் இந்தியா-வங்கதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களில் சட்டவிரோதமாக தங்கபிஸ்கட் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சனியன்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்க பிஸ்கட்டுக்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த எடை 14.296 கிலோவாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.8.5கோடியாகும். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச எல்லையில் ரூ.8.5 கோடி தங்க பிஸ்கட் பறிமுதல் -2 பேர் கைது
previous post