வாழைத்தண்டு – 1 நடுத்தர அளவு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கெட்டியான புளித்த தயிர் – அரை கிண்ணம்
உப்பு – தேவைக்கேற்ப.
அரைக்க
தேங்காய்த் துருவல் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2
அரிசிமாவு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
ஊறவைத்த துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி.
தாளிக்க
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும். வாழைத்தண்டினை நார் நீக்கி, ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்து நன்கு அலசி வைக்கவும். பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து தயிர் சேர்த்து இறக்கவும். பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். தயிர் சேர்த்த பின் கொதிக்க வைக்கக் கூடாது.