சென்னை: ஒரே நாளில் ஒரே சமயத்தில் நான், விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் சீமான் மனு அளித்துள்ளார். கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்னைகள் இருப்பதால் ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியமானது. விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் தொடர்ச்சியாக காணொளி வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர். இருவரின் குற்றச்சாட்டிலும் உண்மையும் அடிப்படையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்- சீமான்
previous post