சென்னை: சென்னை ஆவடியில் உள்ள ஒன்றிய போர் ஊர்தி ஆராய்ச்சி ஊழியர் வீட்டில் 15சவரன் நகை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீசிவருகின்றனர். வெற்றிவேல் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.