![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/17-41.jpg?type=webp&quality=80)
ஹூண்டாய் நிறுவனம் ஏஐ 3 மைக்ரோ எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை முன்னிட்டு இதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியச் சாலைகளில் இந்த கார் வலம் வரும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தக்கார் கே1 – ஐ அடிப்படையாகக் கொண்டும், கிராண்ட் ஐ10 நியாஸ் , கேஸ்பர் கார்களின் அம்சங்களுடனும் இருக்கும் எனவும், கிராண்ட் ஐ10, அவ்ராவில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இடம் பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பண்டிகை சீசனில் விற்பனை செய்ய ஏதுவாக ஜூலை – செப்டம்பரில் உற்பத்தி துவங்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கெனவே தென் கொரியாவில் இந்தக் காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.