கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சோக்காடி கிராமத்தில் இரு தரப்பு மோதலில் பட்டியலின மக்களின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக மனுதாரரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பு மோதலில் படுகாயமடைந்த 10 பேர் ராசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.