கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் அரசுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கமலாக்கியா தேய் புர்காஷ்யஸ்தா ஆகியோர் அரசில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் சர்மா கூறுகையில்,‘‘பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மீது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் நம்பிக்கை வைத்து அரசுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர்” என்றார். புர்காஷ்யஸ்தா நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எம்எல்ஏ பசந்தா தாஸ் எம்எல்ஏவாக நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
அசாம் முதல்வருக்கு காங். எம்எல்ஏக்கள் ஆதரவு
previous post