Friday, May 17, 2024
Home » குதிரையில் ஊர்வலம்: தலித் மணமகன் மீது தாக்குதல்

குதிரையில் ஊர்வலம்: தலித் மணமகன் மீது தாக்குதல்

by Karthik Yash

காந்திநகர்: குஜராத்தில் குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக தலித் மணமகனை தாக்கிய 4 பேரை கைது செய்துள்ளனர். குஜராத்தின் காந்திநகரில் உள்ள சடாசனா கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த விகாஸ் சவ்தா என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மணமகனான அவர் உறவினர்கள் 100 பேருடன் குதிரையில் மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாக சென்றார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர், விகாஸ் சவ்தாவை குதிரையில் இருந்து கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினார். மேலும் தங்களது சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் குதிரையில் வரவேண்டும் என்று கூறி சாதி ரீதியாக அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனிடையே அங்கு வந்த மேலும் 4 பேரும் விகாஸ் சவ்தாவை தாக்கி உள்ளனர். பின்னர் அவர் நான்கு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மணமகனின் உறவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

eighteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi