டெல்லி: டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார்.