சென்னை: ஆருத்ரா மோசடி புகாரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அளித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வங்கியிடம் விவரங்களை கேட்டுப்பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளது. ஆர்.கே.சுரேஷிற்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.