சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 15 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை பெற்றுக் கொள்ள மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.