சென்னை: சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே1ல் தொடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே 9ல் விநியோகம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கலாம், மே 8ல் +2 தேர்வு முடிவுகள் வெளியான பின் மே 9ல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.