ஆந்திரா: ஸ்ரீசத்யசாய் மாவட்டம் மேல்வாய் வனப்பகுதியில் 2 நாட்களில் 2 சிறுத்தைகள் உயிரிழந்தது. நேற்று ஒரு சிறுத்தை இறந்த நிலையில் மேலும் மற்றொரு சிறுத்தை பலியானது குறித்து ஆந்திர வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுத்தைகளின் உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் இறப்பிற்கான காரணம் தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மேல்வாய் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.