ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் தாலுவாய் பள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரம் உடைக்கப்பட்டது. ரயில்வே கொடூரு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கீழே போட்டு உடைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் உடைப்பால் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது.