Saturday, May 18, 2024
Home » அந்தமான் தீவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு!

அந்தமான் தீவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு!

by Suresh

அந்தமான்: அந்தமான் தீவில் காலை 7.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது. பாதிப்பு குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

சமீப காலமாக, நாடு மற்றும் உலகின் பல பகுதிகளில் நிலநடுக்க சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 01ம் தேதி புத்தாண்டன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர். மேலும் நேற்று இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானது.

இந்நிலையில் அந்தமான் தீவுகளில் இன்று(ஜனவரி 10) காலை 07:53 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம், இன்று காலை 07:53 மணிக்கு ஏற்பட்டது எனவும் அட்சரேகை: 12.66, தீர்க்கரேகை: 93.02 மற்றும் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi