சென்னை: பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: நிதி நிறுவன மோசடிகளுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு தான் பொறுப்பேற்க வேண்டும். மதுரம் புரமோட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு 7 ஆண்டுக்கு மேலாகியும், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்பப்பெற்றுத் தராததை நியாயப்படுத்த முடியாது.
மக்கள் உழைத்துச் சேர்த்தப் பணத்தை திரும்பப்பெற்றுத் தர வேண்டியதுஅரசு மற்றும் காவல்துறையின் கடமை. நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்தி, முதலீடு செய்தவர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும். அதற்கான பணிகளை கண்காணிக்க டி.ஜி.பி நிலையிலான காவல் அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக அரசு நியமிக்க வேண்டும்.