திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல்நிலைய காவல் ஆய்வாளர் யுவராணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக யுவராணி மீது புகார் எழுந்தது. புகாரை அடுத்து யுவராணியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆணையிட்டுள்ளார்.