புதுடெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலமாக பாஜவுடன் அவர் கூட்டணிக்கு முயற்சிப்பது உறுதியாகி உள்ளது. பாஜவுடன் ராஜ் தாக்கரேவின் கூட்டணி உறுதியாகும்பட்சத்தில் அவருக்கு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் போட்டியிட ஒரு தொகுதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.