டெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள் மீதான 20% சுங்கவரியை நீக்கும் முடிவுக்கு பரூக் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை சிந்திக்காமல் ஜி 20 மாநாட்டில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் முடிவால் காஷ்மீர் மட்டுமல்ல இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் விவசாயிகளும் பாதிக்கப்படுவர். இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஆப்பிள் உற்பத்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.