நெல்லை,ஆக.28: நெல்லை அருகே மொபட் மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் அடுத்த தருவை கிராமம் பாலாஜிநகரை சேர்ந்தவர் கணபதி (75). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மொட்டில் மேல முன்னீர்பள்ளம் பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்த மகப்பேறு ஆம்புலன்ஸ், இவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த கணபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.