நெல்லை,ஆக.28:நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (72). கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்ததில் இவரது கையில் முறிவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 24ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கினார். இதுகுறித்து தெரியவந்ததும் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.