தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ விருந்து விழா நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: உயர்மட்ட குழுவின் கூட்டம் நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்றது. கூட்டணி பற்றி குழுவின் கருத்துக்களை நான் கேட்டுள்ளேன்.
அவற்றை தீர ஆராய்ந்த பிறகு ஒரு வாரத்தில் கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்பேன். கூட்டணி பற்றி அந்த கூட்டத்தில் ஒற்றைக் கருத்து ஏற்படவில்லை. அதனால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. எனவே கூட்டத்தில் பேசிய கருத்துக்களை தீர ஆலோசித்து விரைவில் ஒரு முடிவை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.