கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சக்கரப்படித்துறை காவிரியாற்றின் படித்துறையில் நேற்று முன்தினம் காலை கும்பகோணம் பெருமாண்டியை சேர்ந்த பாலகுரு (48), கர்ணக்கொல்லையை சேர்ந்த சவுந்தரராஜன் (42) ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். போலீஸ் விசாரணையில் போதைக்காக மதுவில் சானிடைசரை கலந்து குடித்து இறந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களுடன் மது அருந்திய ஜெயகிருஷ்ணா (30) என்பவர் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முருகன் (50), என்பவரும் தங்களுடன் 21ம் தேதி மது அருந்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில் முருகன் காந்தி பூங்கா முன் இறந்து கிடந்ததும், அடையாளம் தெரியாமல் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருப்பதும் தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ஜெயகிருஷ்ணா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.