சென்னை: ஆட்சியில் இருக்கும்போது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் அதிமுக இழிவுபடுத்தியது என திமுக தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் பழனிசாமி நடத்தும் கபட நாடகம் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமது ஆட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா என்று அரசு ஊழியர்களை எடப்பாடி கொச்சைப்படுத்தினார்.