Friday, May 10, 2024
Home » அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மனு ஏற்பு: 25ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மனு ஏற்பு: 25ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

by Ranjith

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் வரும் 25ம் தேதி அவரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, வரும் 25ம் தேதி ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi