சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிரான சசிகலாவின் மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 30-ல் விசாரணைக்கு வருகிறது. சசிகலா தரப்பு முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய சசிகலா மனுவை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது. சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.