சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. ஜெயலலிதாவின் உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நடத்திய ஊர்வலம் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.