சென்னை: தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் விதிகளை மீறி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையான அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக பறக்கும் படை புகார் அளித்துள்ளது.