காபூல்: ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என தடைவிதித்ததை அடுத்து சுமார் 3,30,000 பெண் குழந்தைகள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பெண்கள் கல்வி கற்பது, பூங்காக்களுக்கு செல்வது உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.