சென்னை : இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தடையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், “எங்களிடம் உள்ள ஆவணங்களின்படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என உள்ளது. எனவே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தவும் இரட்டை இலை சின்னத்தில் அந்த வேட்பாளர்கள் போட்டியிடவும் எந்த தடையும் இல்லை,”என தேர்தல் ஆணையம் சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது