Wednesday, May 22, 2024
Home » மங்கலம்பேட்டை அருகே 60 அடி கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு

மங்கலம்பேட்டை அருகே 60 அடி கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிருடன் மீட்பு

by Lakshmipathi

மங்கலம்பேட்டை : கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே விசலூர் கிராமத்தில் வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜா(45). விவசாயி. இவரது மகள் ஆர்த்திகா(19). அதே தெருவில் வசிக்கின்ற பாலன் மகன் குப்பன் என்பவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இதில் தற்போது 8 அடி வரை தண்ணீர் இருந்தது.

இந்நிலையில் நேற்று அவ்வழியே செல்லும் போது கால் தவறி ஆர்த்திகா கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்தவர்கள் உடனே மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி ஆர்த்திகாவை உயிருடன் மீட்டு அவருடைய தந்தை ராஜாவிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi