சென்னை :அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து பழனிசாமி பதில் அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓ.பி.எஸ். அணுக தடை ஏதும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.