சென்னை: வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் ராஜேஷ்தாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜேஷ்தாஸ் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.