Saturday, May 4, 2024
Home » ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி!

by Francis

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மாநில அரசுகளும் இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகிறது.

கொரோனாவை தடுக்க தமிழ்நாடு அரசும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்கிற உத்தரவை அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

2099 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், காய்ச்சல் அதிகமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை நடந்து வருகிறது. ரத்த மாதிரி பரிசோதனைகள் முடிவுகள் வந்த பின்னர்தான் அவருக்கு வந்த காய்ச்சல் எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

2 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi