சென்னை: கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாக பதிவு உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளர். விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி. ரமேஷ்பாபு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் ஏ.எஸ்.பி. மலைச்சாமி சென்னை சொத்து பிரிவின் அமலாக்கத்துறை எஸ்.பி.யாக பதிவு உயர்த்தப்பட்டுள்ளது.