சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது 2011-ல் வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.