சென்னை: நடிகை ஷெரினாவுக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்ததாக சென்னையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜன.20ல் வாட்ஸ் அப் மூலம் நடிகை ஷெரினாவுக்கு அவரது கார் ஓட்டுநர் கார்த்திக், அவர் நண்பர் இளையராஜா மிரட்டல் விடுத்தனர். ஆபாசமாக பேசி மிரட்டியதாக ஷெரினா அளித்த புகாரில் அண்ணாசாலை போலீசார் விசாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.