Sunday, May 19, 2024
Home » தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

by Ranjith

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து சென்ற மீனவர்கள் 10 பேரையும் விசைப்படகையும் 15ம் தேதி கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.

15ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 18 பேரையும், விசைப்படகுகளையும் 16ம் தேதி கைது செய்துள்ளனர். நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

nine − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi