12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி செல்வி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்ணான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைந்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.